மாற்றம் விரும்பு
கற்றுக்கொடுக்க
முயற்ச்சிக்காதே-நீ
கேட்பது,சொல்வது
அறிந்துகொண்டதைப் போல்
பாசாங்கு செய்வது-
நீயொரு நகல் என்பதுவே,.
உன்னை நீ
அடையாளத்திலிருந்து அழி.
அழிப்பதொன்றே
நீ வேறோன்றாய்
வருவதற்க்கான வழி
மாற்றம் விரும்பு;
மாறு;
மாறுதலே அனைத்திலும் நன்று…
முத்துக்குமார்.
அழிப்பதும்வேறொன்றாய் வருவதும் சரியே/ஆனால் கற்றுக்கொடுக்க முயற்சிப்பதும்,அறிந்து கொள்வதும் எப்படி தவறாகமுடியும்?நல்ல கவிதை அழுத்தம் தெறிக்கும் எழுத்து,வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் விமர்சனத்துக்கு நன்றி,
ReplyDeleteஒன்றிலிருந்து ஒன்றை அறிந்து கொள்வதில்லை.அந்த ஒன்றை
அறிந்து கொள்வதும்,மற்றவைகளை அழித்தொழிப்பதுவே.
அறிந்து கொள்வது போல் பாசாங்கு செய்வதும் தவறே/
ReplyDeleteஅறிந்து கொள்வது போல் பாசாங்கு செய்வதும் தவறே/ ராஜா விருதுநகர்
ReplyDeleteமற்றவர்கள் மதிப்பை பெற இங்கு எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் போல நடித்து கொண்டு தானிருக்கிறோம்
ReplyDelete