அறிவியல் உண்மைகளை
கொஞ்சம் நம்புங்க சாமி
இந்திய தொல்பொருள் துறையும்,குஜராத் மாநிலம்
அகமதாபாத்திலுள்ள
விண்வெளி பிரயோகங்கள் மையம் எனும் ஆய்வு நிறுவனமும்
சேதுபாலம்
சுத்தமான இயற்கை கட்டமைப்பு என திட்டவட்டமாக
கூறுகிறது.
இந்திய புவியியல் துறை அந்த பாலத்திலேயே துளை போட்டு
ஆராய்ச்சி
செய்து அது மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும்
இந்திய துனைக்கண்டத்தில் மனிதர்கள் வாழத்துவங்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன் இயற்கையாக உருவானது என திட்டவட்டமாக கூறுகிறது.
அமெரிக்காவின் நாசா அமைப்பு செயற்கைகோள் மூலம்
வெளியிட்ட ஒரு புகைப்படத்தை காட்டியே ராமர் பாலம் எனத் துள்ளிக்
குதித்தார்கள்.ஆனால் அதே அமைப்பு வெகுதூரத்திலிருந்து எடுக்கப்பட்ட
புகைப்படத்தைக்கொண்டு
அப்படி சொல்ல முடியாது என அதிரடியாக அறிவித்தது.
நீரி எனப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு
நிறுவனமும்,
சேது சமுத்திர திட்டக்குழுவும் விரிவான ஆய்வுகள்
செய்து சுற்றுச்சூழலுக்கும்
பவளப்பாறைகளுக்கும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும்
தாவரங்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என உறுதியாக தெரிவிக்கிறது.
சேதுதிட்டம் நிறைவேறினால் தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாகும்.
தமிழகத்தின் தென்மாவட்ட இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
சுற்றுப்பாதை குறைவதால் ஏற்றுமதி கட்டணம் குறையும்.அதன் மூலம் தொழில்
வளர்ச்சி பெறும்.மீனவர்களின் இயங்குநிலை விரிவாகும்.
சேது சமுத்திர திட்டம்
நிறைவேற்ற வலியுறுத்தி...தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்
மாநில சிறப்பு மாநாடு
மதுரை..2013அக்டோபர்19
No comments:
Post a Comment